பக்கங்கள் . . .

11) மகளின் அப்பா


கனவுகள் நிஜங்களாகவும்

நிஜங்கள் கனவுகளாகவும்

தோன்றும், அந்தப்

பள்ளிவயதில் கொடைக்கானல்

ஏரியில் பள்ளித் தோழிகளோடு

இவள் படகில் போனாள்.


அது கவிழ்ந்தது.


மீட்கப்பட்டவள்

இவள் மட்டும்தான்.


சில

நாட்களில் ஏரியெங்கும்

சீருடைப்பிணங்கள் மிதந்தன.


அன்று கொண்ட நீரச்சம்

இன்றும் தீரவில்லை.


நீரச்சம் நிரந்தர அச்சம் அல்ல.

நிச்சயம் களையலாம்.


இல்லையென்றால் அந்தப் பயம்

உடலையும் மனதையும்

உள்ளிருந்தே தின்றுவிடும்.


இந்தத் தண்ணீர்பயத்தைத்

தவிர்த்தாக வேண்டும்.


கவனம்.

தூசு எடுக்கும் அவசரத்தில்

கருமணியே

தூர்ந்துவிடக்கூடாது.


"எனக்கு

அவள் ஒரே பெண்."


இதுதான் அடிக்கடி கேட்கும்

அப்பாமொழி.


ஒரே பெண் என்றால்

நூறுசதம் அன்பா?


இரண்டு

பெண்கள் என்றால் ஆளுக்கு

ஐம்பதுசதம் அன்பா?


நான்கு

பெண்கள் என்றால் இதயத்தை

நான்காக்கி இருபத்தைந்து

சதமா?


ஒரே பெண் என்றால்

உயிர்ப்பாசம் வருமா?


இன்னொரு பெண் இருந்தால்

இவள் இறந்துபோகச்

சம்மதமா?


உங்கள் ஆண்மைகலந்த

அறிவுதான் என் மகளைத்

தலைசாயவைத்தது.

என்னைத்

தலையாட்ட வைத்தது.


ஆனால்

தர்க்கம் வேறு. தர்மம் வேறு.

No comments: