பக்கங்கள் . . .

7) இலையை தென்றல் சுமக்கும் இது அழகிய காதல்


நீ உணவில்லாமல்

ஒருமாதம் வாழலாம்

நீரில்லாமல்

ஒருவாரம் வாழமுடியாது

தண்ணீர்தான் உயிர்

இந்தக் கடல்

அந்த உயிரின் தாய்

தாயோடு தள்ளி நிற்பதா?

வா

எட்டி நின்றவளைக் கட்டிப்

பிடித்தான்

திமிறினாள்.

வாழைத்தண்டாய்

ஓடிந்தாள்.

வாளை மீனாய்

வழுக்கினாள்.

அவன் முன்னுக்கிழுத்தான்.

அவள் பின்னுக்கிழுத்தாள்.

வேண்டாம். இந்த

விளையாட்டுமட்டும்

வேண்டாம்

என்னோடு வாழ்ந்தால் நீ

நெருப்புப் பள்ளங்கள் தாண்ட

வேண்டியிருக்கும்.

நீர்கண்டு பயந்தால் எப்படி?

நெருப்புப் பயம் இல்லை.

தண்ணீர்தான் பயம்.

அவன் தூக்கமுயன்றான். அவள்

துவண்டு விழுந்தாள்.

கைதட்டிச் சிரித்தன அலைகள்.

நாடகம் பார்த்தன நண்டுகள்.

சிதறிவிழுந்தவளைச்

சேர்த்தெடுத்தான்.

அவளைச் சுமந்து அலையில் நடந்தான்.

அவளோ அந்தரத்தில்

நீச்சலடித்தாள்.

இடுப்பளவுத்

தண்ணீரில் இறக்கிவிட்டான்.

அஞ்சினாள்.

தண்ணீரின் ததும்பலில் மிரண்டாள்.

அவனை உடும்பாய்ப்

பற்றினாள்.

அவன் உதறி ஒதுங்கினான்.

நுரைச் சதங்கைகட்டி ஆடிவந்த

அலைகள்கண்டு அலறினாள்.

No comments: