பக்கங்கள் . . .

14) சுடும் சொல் மென்மையானது


"அவள் உங்களுக்குத் தகுதி

இல்லாதவளா?"

அப்படியில்லை.

அன்பில் - குணத்தில் -

காதலில் அவள் என்னிலும்

மிக்கவள்.


ஆனால், என்

வாழ்க்கைக்குத் தயாராய்

அவள் இன்னும்

வார்க்கப்படவில்லை.

என்னுடையது புயல்யாத்திரை.

அவள் பூயறைக்

குத்துவிளக்கு. அணைந்து

போகாமலிருப்பது எப்படி

என்பதைச் சுடருக்குச்

சொல்லிக்

கொடுக்கவேண்டும்.


அகத்தியர் பேசவில்லை.


தன் மௌனத்தைப் புகையாய்

மொழி பெயர்த்தார்.


பிறகு வேர்களில் வீழாமல்

இலைகளைமட்டும் நனைக்கும்

சாரலாய் - கலைவண்ணன்

காதுதொடாமல் தனக்குத்

தானே பேசிக்கொண்டார்.


நான் தவறான இடத்தில்

தலையாட்டி விட்டேனா?


காற்றில் கசிந்த வார்த்தை

அவன் காதுகளில்

விழுந்துவிட்டது.


சுள்ளென்று

ஏதோ சுட்டது.

பொங்கிவழியாமல்

புலனடக்கம்கொண்டான்.


மோனோலிசாவின்

புன்னகைதிருடி உதடுகளில்

ஒட்டிக்கொண்டான்.


மெல்ல

மெல்லச் சொல்லவிழ்த்தான்.

நீங்கள் தலையாட்டியது

தப்பானவனுக்கல்ல.

சரியானவனுக்குத்தான்.


எனக்குக் கிராமத்துக்

குட்டிச்சுவர் வாழ்க்கையும்

தெரியும். நகரத்து நட்டசுவர்

வாழ்க்கையும் தெரியும்.

No comments: