பக்கங்கள் . . .

8) பூ மூர்ச்சையானது . . . ! !


பிரமைபிடித்துப் பேச்சிழந்தாள்.

தூரத்திலிருந்து

ஒரு பேரலை

அவள் பெயர் சொல்லிக்

கொண்டே

படைதிரட்டி வருவதாய்ப்பட்டது அவளுக்கு.

அவ்வளவுதான்.

அவள் ஞாபகச்சங்கிலி

அறுந்துவிட்டது.

அந்த முர்க்க அலையின்

மோதுதலில் தன்னிலை குலைந்து

தடுமாறி எழுந்து

ஒருகணம் மிதந்து மறுகணம் அமிழ்ந்து

மீண்டும் எழுந்து

மீண்டும் விழுந்தாள்

அலைகளில்

தொலைந்தாள்

No comments: