பக்கங்கள் . . .

6) கடலும் தேவதையும் - அவர்களோடு ஒரு கவியும்


கடல்நீர் இடம்மாறி

நிலப்பரப்பில் நின்றால்

எல்லா இடங்களிலும்

முன்று கிலோமீட்டர் உயரம்

தண்ணீர் நிற்கும்

.

புள்ளிவிரம் சொல்லியே

பொழுது போக்கிவிட்டீர்கள்.


"சரி, நல்லவிவரம் சொல்லட்டுமா?

ஒரு முத்தத்தில்

எத்தனை வோல்ட்

மின்சாரம்தெரியுமா?"


போதும். போதும். . .. .

புள்ளிவிவரப் புலியே.

ஆளைவிடுங்கள்.


விடமாட்டேன்.

வா.

தண்ணீரில் நனை

அல்லது

தண்ணீரை நனை.


அலையோடு

விளையாடு.


தெறிக்கும் திரவநட்சத்திரங்கள்

சொல்லாத இடங்களில் விழுகையில்

இல்லாத அனுபவம் எழுமே....

அந்த சுகம் துய்.


எத்தனை மனிதர்

கடல்பார்த்தனர்?

எத்தனை மனிதர்

இதில் கால்வைத்தனர்?

வா.

இந்தச் சிற்றலையில்

கால் வைத்து

யாரும் செத்துப்போனதில்லை.


தண்ணீர் பயம் தவிர்.


சொட்டச் சொட்ட நனை.


கிட்டத்தட்டக் குளி.


நீரின் பெருமை நிறையப்பேர்

அறியவில்லை.


காதலி பெருமை பிரிவில்.

மனைவி பெருமை மறைவில்.

தண்ணீரின் பெருமை

பஞ்சத்தில் அல்லது வெள்ளத்தில்.